காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல்: 27 பேர் பலி.!
[2025-04-23 21:45:07] Views:[72] காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பஹல்காமில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 27க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 40க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.