ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி.! - சிறுவர்கள் இருவர் படுகாயம்:
[2026-01-17 18:54:24] Views:[7]
ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த 44 வயதுடையவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 வயது சிறுவனும் 3 வயது சிறுமியும் லேடி ரிஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர் கொழும்பு 13 ஐச் சேர்ந்தவர் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியில் வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாரக டலோர பொலிஸ் நிலையம் மற்றும் கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










