பாரிய விபத்து - 17 பேர் பலி
[2026-02-23 20:20:25] Views:[7]
நேபாளத்தில் உள்ள திஷுலி ஆற்றில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்ற பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










