yarlathirady.com

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் ஆரம்பம்..!

[2026-08-20 22:11:31] Views:[27]

சமீபத்தில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்றயதினம் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் 25 வரை தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 09ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 மையங்களில் இத்தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முடிந்ததும், இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (A/L) விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் தொடங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே மேலும் தெரிவித்துள்ள கூறப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
ஹாய் திரைப்படம்
2026-09-08 20:13:57
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில்
தர்மன்
2026-09-05 12:44:56

இருமுடி
2026-09-03 09:45:21