யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
[2025-06-19 11:44:28] யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டது.
பலாலி வீதி இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.!
[2025-06-18 13:30:09] யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தூதுவர்- சுமந்திரன் யாழில் சந்திப்பு;
[2025-06-18 12:49:20] யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவைக்கு அனுமதி;
[2025-06-17 21:54:06] கொழும்பு - யாழ்ப்பாணம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்.!
[2025-06-17 12:38:27] கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் பயணித்த மோட்டார் வாகனம் மீது நேற்று (16) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது.!
[2025-06-17 11:49:16] யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் நீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தினை மக்கள் தினமும் வழிபட அனுமதி..!
[2025-06-16 20:13:14] இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய நேற்றைய தினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய யாழ் மாநகர முதல்வர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு :
[2025-06-16 19:20:28] யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (16) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.!
[2025-06-16 13:21:14] யாழ்ப்பாணம், வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கஞ்சாவுடன் படகு ஒன்று மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் மத நல்லிணக்க பாதயாத்திரை!
[2025-06-16 12:55:17] தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினரின் நிலையான சமாதானத்திற்க்காக மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இளைஞர்களின் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.
முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைத் தொகுதியில் தீ பரவல்..!
[2025-06-16 11:47:00] முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளன.
யாழில் வாள் வெட்டு.! நால்வர் படுகாயம்;
[2025-06-16 10:37:27] யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம் (14) சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம்" கவனயீர்ப்பு போராட்டம்.!
[2025-06-13 19:37:11] "எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம், புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம்" என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்.!
[2025-06-13 18:09:33] இலங்கை இராணுவத்தின் 11ஆவது தளபதியான ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க (91 வயது) காலமானார்.
விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்களி 35ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு.!
[2025-06-13 12:47:14] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்றுமுன்தினம் (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவம் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது.
[2025-06-13 11:56:35] வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
யாழ். மாநகர சபையின் முதல்வராக மதிவதனி தெரிவு!
[2025-06-13 11:07:51] யாழ்.மாநகர சபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி 19 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டார்.