110 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை..!
[2025-08-26 19:14:23] Views:[84] இந்தியா இராமநாதபுரம் மாவட்டத்தில் காணப்படும் 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பன் பாலத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1914 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவு நிலப்பகுதியையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் 2.3 கிலோ மீற்றர் தொலைவுக்கு கடலில் ரயில் பயணிப்பதட்காக மேம்பாலமாக பாம்பன் பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலமானது கடல் பகுதியை கடந்து செல்லும் பெரிய படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்காக இரு பிரிவாக பிரிந்து தூக்கி பின் தண்டவாள நிலையில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்த பாலமானது சேதம் அடைந்ததையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் அருகே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் லிப்ட் வகை தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி இந்த புதிய தூக்கு பாலத்தை திறந்துவைத்தார். தற்போது அதில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பழைய தூக்கு ரயில் பாலத்தை அகற்றுவதற்கு இந்திய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி 4 மாதங்களில் பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது