ஆஸ்திரேலியா கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 15 பேர் பலி..!
[2025-12-15 19:19:35] Views:[7]
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி கடற்கரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாங்க கூறப்படுகிறது.
குறிப்பிட்ட சம்பவத்தில் துப்பாக்கிதாரிகள் இருவர் மீதும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றைய நபர் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










