இந்திய இராணுவ வாகன விபத்து: 10 வீரர்கள் பலி.
[2026-01-23 21:53:45] Views:[7]
இந்திய ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் நேற்றையதினம் ராணுவ வீரர்களுடன் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று 200 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளது.
கரடு முரடான சாலையில் மிகவும் கவனத்துடன் வாகனத்தை ஓட்டி சென்ற நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த கோர விபத்து நடந்துள்ளது. குறித்த வாகனத்தில் பயணித்த இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ராணுவ வீரர்களை பத்திரமாக அழைத்து செல்லும் புல்லட் ஃப்ரூப் வாகனம் என்று தெரிகிறது. ஆனால் மிக உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததால் பெரிய விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.










