யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொண்டாட்டம்.
[2026-02-05 19:47:30] Views:[7]
இலங்கையின் 78 வது சுதந்திர தின கொண்டாட்டம் இம்முறை யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின கொண்டத்தை ஐக்கிய இளைஞர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட வாகனப் பேரணியும் நடைபவனியும் நேற்றைய தினம் நடைப்பெற்றது.
குறித்த பேரணியானது பண்ணை சந்தியில் ஆரம்பமாகி யாழ் பொது நூலாக வாசலில் நிறைவுபெற்றது.
இதன்போது தேசியக்கொடியை ஏந்தியவாறு வாகனங்கள் பேரணியாக சென்றதுடன், இனங்களின் கலாசாரங்களை பிரதிபலிக்கக்கூடிய அனைத்து மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றி கொண்டாட்டத்தை சிறப்பித்திருந்தனர்.










