2 ஆவது தடவையாகவும் சாம்பியனானது RCB...!!
[2026-06-01 22:40:43] Views:[38]
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிகுஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஒவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து155 ஓட்டங்களை பெற்று ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு 156 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் அணி 17 ஆவது ஓவர் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 161 ஒட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.










