யாழில் பல லட்சங்களை கொள்ளையடித்த சிறுவன் உட்பட இருவர் சிக்கினர்: பொலிஸார் அதிரடி..!!
[2026-06-02 17:10:11] Views:[37]
வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தி கண்காணிப்பு கமராக்களை ஆராய்ந்ததில் மேற்படி சந்தேகநபர்கள் பிடிப்பட்டுள்ளனர். நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவரை கைது செய்யச் சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.
சந்தேகநபர்களிடமிருந்து 74 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளது நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரரணை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










