புயலால் பாதிக்கப்பட்ட கடுகண்ணாவ ரயில் நிலையம் 8 மாதங்களின் பின் மீண்டும் சேவையில்
[2026-07-12 22:04:07] Views:[49] டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடுகண்ணாவ ரயில் நிலைய சேவைகள் கடந்த 8 மாதங்களின் பின்னர் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளி காரணமாக மலையகப் புகையிரத வீதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கடுமையான சேதங்களை அடுத்து, சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக கடுகண்ணாவ புகையிரத நிலையத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மலையகப் புகையிரதப் பாதையின் அத்தியாவசிய மறுசீரமைப்பு மற்றும் விசேட நடுத்தர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த புகையிரதம் தற்போது இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றைய தினம் முதலாவது புகையிரதம் கடுகண்ணாவ நிலையத்தை வந்தடைந்துள்ளது.










