யாழ் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறந்து வைப்பு
[2026-07-15 15:22:48] Views:[59]
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால் சுமார் 03 கோடி ரூபாய் நிதியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதியின் ஒரு பகுதியை இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர்.










