அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற இயற்கையான வழி...!
[2026-07-16 15:40:58] Views:[72]
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் செயற்கையான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
☞ தேவையான பொருட்கள்
📍தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
📍விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்
☞ பயன்படுத்தும் முறை
முதலில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து லேசாக சூடாக்கவும்.
பின் உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும்.
இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நீளமாக வளரும்.










