காட்டுத்தீயினால் வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்..!
[2026-07-25 21:16:17] Views:[28]
காட்டுத்தீ காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 65,000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பியக் கண்டத்தில் பலத்த காட்டுத்தீ தொடர்ந்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பெயினில் சுமார் 25,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் 20,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தென்மேற்கு பிரான்ஸின் ஜிரோண்ட் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகக் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 44,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை 12,500 ஹெக்டேர் காடுகள், 53 வீடுகள் மற்றும் ஒரு சுற்றுலா முகாம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










