மற்றுமொரு ஏவுகணை சோதனையில் வெற்றி கண்ட இந்தியா..!
[2024-05-03 21:43:12] Views:[297] இந்தியா மற்றுமொரு அதிநவீன வழிமுறைகளுடன் கூடிய ஏவுகணை பரிசோதனை ஒன்றினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்திய படையினருக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது.
அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு இந்திய இராணுவ படைக்கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்றது.
இந்நிலையில் டார்பிடோ என்கிற ஏவுகணையை இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒடிசா கடற்கரையில் உள்ள டொக்டர் APJ அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு மற்றும் பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டதாக இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.