விமானத்தில் உயிரிழந்த பெண் !
[2024-12-28 10:13:21] Views:[191] டோஹா கத்தாரில் இருந்து பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸில் தங்கியிருந்த இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கட்டார் எயார்வேஸ் விமானத்தில் பயணித்த 81 வயதுடைய குறித்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
முன் அறிவிப்புகளின்படி மருத்துவக் குழுக்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எர்பிலில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இது தொடர்பாக பிரான்ஸ் பிரஜையான அவரது மகனுக்குத் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்ததுடன், இறந்தவரின் உடலை பிரான்ஸ்க்கு கொண்டு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.