காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்...!
[2024-12-30 21:14:22] Views:[212] காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையேயான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை எதிர்வரும் புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இந்த சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு கடந்த டிசம்பர் 25 முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரத்திற்கு 6 நாட்கள் இந்த கப்பல் சேவை நடைபெரும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000/= ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.