இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து..!
[2025-03-21 17:03:10] Views:[130] இலங்கை விமானப் படை க்கு சொந்தமான சீன K-8 இன்று வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது குறித்த விபத்தின் போது விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேறி தரையிறங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,என்பதுடன் இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதேவேளை குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.