புத்தளத்தில் 11.3kg தங்கம் மீட்பு: மடக்கி பிடித்த கடற்படையினர்.!!
[2025-01-05 08:49:46] Views:[247] கற்பிட்டி, பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் 11.3kg நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனத் கூறப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40-45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி, பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்யும் போதே குறித்த இயந்திர படகில் தங்கம் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதன்போது குறித்த தங்கத்தை பறிமுதல் செய்த கடற்படையினர், அந்த இயந்திர படகில் பயணித்த மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.