கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் விரைவில்: அரசாங்கம் நடவடிக்கை.!!
[2025-01-06 10:47:07] Views:[156] கடந்த வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகேதெரிவித்துள்ளார்.
காலி, ஹபராதுவ பகுதியில் நேற்று(05) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிகையிலே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
சிறு மீன்பிடி தொழிலாளர்களுக்கும் நெடுநாள் படகு உரிமையாளர்களுக்கும் குறித்த எரிபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளதால் எதிர்வரும் நாட்களில் குறித்த விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் என கடற்றொழில் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.