கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது!
[2025-01-07 15:08:13] Views:[184] கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (06) ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
அவர்கள் கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு குறித்த கஞ்சாவை கொண்டு சென்றமை முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் கைதான இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.