யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது.!
[2025-01-09 21:52:19] Views:[203] யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று யாழ்ப்பாணம் காரைநகர் கோவளம் கலங்கரை விளக்கத்தில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்த இந்திய மீனவபடகை கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
இதன்படி காரைநகர் கோவளம் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள்மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டனர்.