கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழப்பு.!
[2025-01-13 13:16:45] Views:[167] கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற யாழ்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்பாணம், குருநகர் பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் (11) கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற மீனவர்கள் இருவர் கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று (12) ஒருவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகவீனமுற்ற அல்போன்சு சந்தியாபிள்ளை என்ற 58 வயதான தொழிலாளியை ஊர்காவற்துறை கடற்கரைக்கு கொண்டுவந்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அதன் போது, தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டதை தொடர்ந்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.