திருமணமாகி 2 மாதங்களில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்!
[2025-01-14 07:13:54] Views:[176] யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து புகையிரதத்தின் முன் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (13) மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக உள்ள புகையிரதப் பாதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான, நவரத்தினம் நவாஸ்கரன் என்னும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரை மாய்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.