வீடொன்றின் மீது அதிகாலை துப்பாக்கி பிரயோகம்!
[2025-01-15 12:49:04] Views:[155] இன்று அதிகாலை தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, தொடங்கொடை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட வில்பாத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (15) அதிகாலை குறித்த வீடு மீது 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள போதும் சம்பவத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர், தொடங்கொடை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.