NPP ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்! இருவர் படுகாய;
[2025-01-16 12:26:38] Views:[145] யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று (15) மாலை பருத்தித்துறை, கொட்டடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த இனந்தெரியாத குழு ஒன்று 10 நிமிடத்தில் குழுவாக இறங்கி சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (வயது - 28) மற்றும் விஜயராசா செந்தூரன் (வயது - 29) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த நீரியல் வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளஞ்குமரன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் அங்கியிருந்த மக்களிடம் கேட்டறிந்துள்ளார்.