முல்லைத்தீவில் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.!
[2025-01-16 19:29:19] Views:[146] முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (15) மல்லாவி, கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.