வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையின் அவசர அறிவிப்பு.!
[2025-01-17 05:52:17] Views:[163] இலங்கை கடற்படையினர் இன்று (2025.01.17) பருத்தித்துறை கடலில், கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து துப்பாக்கி சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இன்று காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை
23.2NM north east of ppd, Coordinate (s) of the location,
09°55'N:080°42E
09°55N:080°36E
09°51N:080°42E
09°51N:080°36E
ஆகிய கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.