இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பெருமளவிலான உப்பு.!
[2025-01-26 09:30:20] Views:[213] இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்டவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை(27) நாட்டை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (Sri Lanka State Trading Corporation) அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவிக்கையில் இம்மாதம் 31ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையும். நாட்டில் நிலவும் உப்பு தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.