யாழ்ப்பாணத்திற்கு தினமும் புதிய இரவுநேர ரயில்சேவை.
[2025-01-27 10:32:40] Views:[188] கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.