கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகள்!
[2025-02-02 10:41:24] Views:[185] கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கதால் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.