பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் தங்கள் அவதானமாக இருப்பது அவசியம் - வடக்கு ஆளுநர்
[2025-02-03 14:43:01] Views:[143] நேற்றையதினம்(02) காலை மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர்,
தங்கள் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் செயற்பாடுகளில் சிக்காமல் உங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என பெற்றோர்களிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.