24 மணிநேரமும் கடவுச்சீட்டு விநியோகம்: அரசாங்கம் எடுத்துள்ள துரிதமான முடிவு...!
[2025-02-05 21:39:47] Views:[187] ஒரு நாளைக்கு 4,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அத்தோடு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, தற்போதைய வழங்குனர்களிடமிருந்து 1,100,000 வெற்று "P" வகை கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான கொள்முதல் செயல்முறை இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.