இன நல்லிணக்கத்திற்காக யாழிலிருந்து காலி நோக்கி பாதயாத்திரை!
[2025-02-08 11:36:09] Views:[138] நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலி சிவன் ஆலயம் வரை புனித திருத்தலத் தரிசன யாத்திரையை ஆரம்பமானது.
இலங்கை முதல் உதவிச் சங்கம் மற்றும் இந்துசமயத் தொண்டர் சபையினால் இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர வேண்டும் என ஆன்மீக யாத்திரிகையினை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி நேற்றைய தினம் இறையருள் வேண்டி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலி சிவன் ஆலயம் வரையான புனித திருத்தலத் தரிசன யாத்திரையை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.