இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது..!
[2025-02-10 10:52:13] Views:[137] நேற்று அதிகாலை கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் மாலை கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக கூறப்படுகின்றது.