இவ்வருடத்தில் மாத்திரம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 89 இந்திய மீனவர்கள் கைது..!
[2025-02-11 11:34:38] Views:[205] இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார், நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
அத்துடன் தொடர்ச்சியாக விளக்கமறியலில் உள்ள மீனவர்களுக்கான வழக்கு விசாரணைகளை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.