புதிய கண்டுபிடிப்பு சந்திரனைப் பற்றி பல கேள்விகள்
[2023-02-27 10:09:37] Views:[441] உலகத்தைச் சுற்றி வரும் ஒரே கோள் சந்திரனே முன்னதாக, ஈர்ப்பு விசையின் காரணமாகச் சந்திரன் பூமியில் இருந்து நிலையான தூரத்தில் இருப்பதாகக் கருதப்பட்டது.இருப்பினும் புதிய கண்டுபிடிப்பு சந்திரனைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி,
சந்திரன் பூமியில் இருந்து மெதுவாக ஆண்டுக்கு 3.8 செமீ தூரம் விலகி செல்வதாக நியூஸ் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. பண்டைய மனித நாகரிகங்களால் காலெண்டராக பயன்படுத்தப்பட்டதால், சந்திரன் நேரத்தை அளவிடுவதில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது.
எனினும், அண்மைய கண்டுபிடிப்பு, கடந்த கால கண்டுபிடிப்புகள் பற்றி நிறைய கேள்விகளைக் கொண்டு வந்துள்ளது என்று அவ்இணையதளம் தெரிவித்துள்ளது.
மிலன்கோவிச் சுழற்சிகள் சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்வதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பூமியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதன் காலநிலையைப் பாதிக்கிறது.
இந்த சுழற்சிகளும் அவற்றின் அதிர்வெண்களும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தையும் தீர்மானிக்கின்றன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சந்திரன் அதன் தற்போதைய தூரத்தை விட சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ நெருக்கமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.