ஆன்லைன் திருமணம்
[2023-04-07 12:22:30] Views:[448] கடந்த 19ஆம் திகதி ஹரியானா மாநிலம் கர்னாலில் ஆன்லைன் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது அச்சம்பவம் உலகம் முழுவதும் செய்தியாகி வருகிறது.
ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வரும் போது ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல்,ஆன்லைனில் கற்பித்தல் போன்ற பல வேலைகள் ஆன்லைனில் செய்யப்படுகின்றன.
மணமக்கள் அமித்தும், அஷுவும் அமெரிக்காவில் தனித்தனி நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்கள் இருவரும் அமெரிக்காவிலேயே சந்தித்து, காதல் வயப்பட்ட பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, இரு வீட்டாரிடமும் தெரிவித்தனர்.
ஆனால் சில காரணங்களால் இந்த ஜோடியால் இந்தியாவிற்கு வர முடியவில்லை.
திருமண ஜோடி அமெரிக்காவில் இருந்ததால் மணமகன் வீட்டார் சோனிபட்டில் இருந்து கர்னால் வரை பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். மணமகள் வீட்டார் கல்யாண மண்டபத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
மணமகனின் உறவினர்கள் சோனிபட்டில் உள்ள தனியார் விருந்து மண்டபத்தில் திகா மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மணமகள் வீட்டார் அங்கு சென்று திகா மரபை முடித்திருந்தனர்.