பூமியை தாக்க காத்திருக்கும் சூரியப் புயல்-முன் ஆயத்த பனியில் நாசா.
[2024-03-12 09:38:22] Views:[213] பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் ஒன்று தாக்கவுள்ளது.இந்த சூரியப் புயலின் தாக்குதல்களை எதிர்நோக்க தற்போது நாசா தயாராகி வருகின்றது.சூரியப் புயல் விரைவில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வானில் எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் அவ்வப்போது, வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக (Solar Storm) மாறுவது வழமையான விடயமே.சூரியனின் இந்த செயல்பாட்டை கண்கானிப்பது மிக முக்கியமான விடயமாகும் ஏனென்றால், இவை புவியீர்ப்பு மண்டலத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.
புவியின் சுற்றுப் பாதையில் உள்ள செயற்கை கோள்கள், ஜிபிஎஸ் சிக்னல்கள் மற்றும் தொலை தூர ரேடியோகளிலும் பாதிப்பை ஏற்படுத்தகூடிய வள்ளமை கொண்டது.இந்த நிலையில், தற்போது விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் சோலார் ப்ரோப் இதனைப் பற்றி ஆய்வு செய்தவன்னம் உள்ளது.
இந்த ஆய்வில் "இணைய பேரழிவு" பற்றி அவர்கள் விவரித்துள்ளதுடன், சூரிய புயலின் போது, சூரியனில் இருந்து வரும் காந்தப்புலங்கள் பூமியின் வளிமண்டலத்தில் பாரிய மின்னோட்டத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.இது சம்பந்தமாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் எனப்படும் இந்த வெடிப்புகள் மணிக்கு 11,000,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும்.இவை வாரத்திற்கு 20 முறை பூமியை நோக்கி வருகிறது. இவை 2025 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சூரிய புயல் இப்போது தாக்கப்பட்டால், செயற்கைக்கோள்களில் எலக்ட்ரானிக்ஸ் கடுமையாக சேதமடையலாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.அத்துடன், இந்த சூரிய புயலால் நீண்ட தூர இணைப்புக்கு முக்கியமான நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பு கேபிள்கள் கூட பாதிக்கப்படலாம்.
வட மற்றும் தென் துருவங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள், இணைய உள்கட்டமைப்பின் பெரும்பகுதி ஆகியவைகள் இந்த நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.இன்றைக்கு உலகத்தில் எல்லாமே செயற்கைக்கோள் பயன்பாடு வழியாக தான் செயல்படுகிறது. இந்த சூழலில் செயற்கைக்கோள் பாதிப்பு அடைந்தால் அது சார்ந்த பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏறபடும். இணையமே இல்லாத நிலை கூட உருவகலாம்” என எச்சரித்துள்ளனர்.