yarlathirady.com

முட்டாள்கள் தினமாக ஏப்ரல் முதலாம் திகதி கொண்டாடுவதன் பின்னனி.

[2024-04-01 10:56:34] Views:[279]

ஆண்டுதோறும் ஏப்ரல் முதலாம் திகதியை உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் பிராங்குகள் செய்து ஏமாற்றிக்கொள்வதும், ஜோக்களை பரிமாறுவதும் நெருக்கமானவர்கள் அல்லது நண்பர்களை குறுப்புத்தனமாக சீண்டும் கேளிக்கையில் ஈடுபடுவது வழக்கமான விடயமே.

ஆனால் முட்டாள்கள் தினத்துக்கான காரணம் எங்கிருந்து தொடங்கியது என இது வரை சரியாக தெரியவில்லை என்றாலும், இந்த நாளில் ஒருவருக்கொருவர் ஏமாற்றி கொள்வது என்பது உலக வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குறும்புகளை செய்து மற்றவர்களை முட்டாள் ஆக்குவதால் இந்த நாள் முட்டாள்கள் நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் உருவானது பற்றி சரியான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், 1582இல் போப் ஆண்டவராக இருந்த 13ஆம் கிரிகோரி, வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நாள்காட்டியை மாற்றியமைத்தார். கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்பட்ட இந்த காலண்டரில் புத்தாண்டு ஜனவரி 1ஆம் திகதி என்று இருந்தது.

புதிய புத்தாண்டு நாளை ஏற்றக்கொண்டவர்கள் ஜனவரி 1ஆம் திகதி புத்தாண்டை கொண்டாட, ஏற்க மறுத்தவர்கள் அதற்கு முன்பு இருந்த ஏப்ரல் 1ஆம் திகதியை புத்தாண்டாக கொண்டாடுவதை தொடர்ந்தனர்.ஆனால் புதிய தேதியை பின்பற்றுவோர் அதிகமாகி, பழைய திகதியை பின்னபற்றுவோர் ஏமாளி, முட்டாள் என கேலி செய்ய தொடங்கினர். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக பரிசுகளை வழங்கினர். இதுதான் முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுவதற்கான பல காரணங்களில் ஒன்று என நம்பப்படுகிறது.

மற்றொரு நிகழ்வாக ரோமானிய திருவிழாவான ஹிலாரியா, (லத்தீன் மொழியில் மகிழ்ச்சிகரமான) கொண்டாட்டத்தை முட்டாள்கள் தினம் என்று அழைக்கிறார்கள். இந்த நாளில் ரோமானிய மக்கள் மாறுவேடங்கள் அணிந்து ஒருவருக்கொருவர் கேலி செய்தும், ஏமாற்றியும் விளையாடி கொள்கிறார்கள்.

அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதலாம் திகதியை ஏப்ரல் மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அங்குள்ள ஆறுகளில் மீன்கள் அதிகம் இருக்கும் நிலையில், பேப்பர் போன்று மீன் செய்து அதை மற்றவர்களின் முதுகில் ஒட்டி ஏமாற்றி சிறுவர்கள் கிண்டலடித்து ஜாலி செய்வார்கள்.

வட துருவத்தின் வசத்த காலத்தின் தொடக்கமாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த நாளிலிருந்து அங்கும் பகலும் இரவும் சமமாக இருக்கும் என கூறப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் பிரபலமான இந்த நாளுக்கு பல்வேறு விதமான வரலாற்று சான்றுகள் இருந்தாலும், ஏமாற்றுவதென்பது பொதுவான விஷயமாகவே இருந்து வருகின்றது.

அதேசமயம் குறும்புத்தனத்தையும், வேடிக்கையும் வெளிப்படுத்தும் நாளாக முட்டாள்கள் நாள் இருப்பதால் வரம்பு மீறாமல் தீங்கு விளைவிக்காமல் மற்றவர்களிடம் குறும்பாக நகைத்தல்வேண்டும். இந்த நாளில் யாரையும் புண்படுத்தாதவாறும், பாதிக்காதவாறும் நகைச்சுவை சொல்வது, புரளி கிளப்புவது, குறும்பாக விளையாடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.