yarlathirady.com

பெற்றோர்களே எதிர்கால சந்ததியினரை தவறாக வழிநடத்தாதீர்கள்

[2024-05-14 10:20:21] Views:[342]

நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்று என்னை சற்று கோபமடைய செய்ததுடன் எமது தமிழ் சமூகத்தின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. அதாவது எமது தாயகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வரும் வேளையில் வடக்கில் குறிப்பிட்ட பிரதேசத்தில் பாடசாலை அருகே மாணவர்களுக்கு கஞ்சி வழங்கப்படும் போது அதில் ஒரு மாணவனிடம் தாய் ஒருவர் கஞ்சி வழங்கும் வேளையில் அந்த மாணவனிடம் சில விளக்கங்களை தருகிறார். அதனைப் பார்த்தபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த தாய் தெரிவிக்கின்றார் அம்மாணவனிடம் "எம் இனம் அழிக்கப்பட்டது. எமது உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் . நாங்கள் உணவு கூட இன்றி அன்றைய காலத்தில் கஞ்சி மட்டுமே பருகினோம். அதனால் அதனை நினைவு கூறவே இவ்வாறு கஞ்சி வழங்குகின்றோம். இதை நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும் . எதிர்காலத்தில் நீங்களும் இதனை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். உண்மையில் அம் மாணவனிடம் இவ்வாறு கூறியமை சரியா எதிர்கால சந்ததியினராவது இந்நாட்டில் சாந்தி சமாதானத்துடன் வாழ வேண்டாமா ? சற்று யோசித்துப் பாருங்கள் இறந்த காலத்தை மீண்டும் மாற்றி அமைக்க முடியாது. கடந்த காலம் கடந்தது. அக்கசப்புணர்வுகளை தற்போது உள்ள சந்ததியினரிடம் முன்வைத்து மீண்டும் மீண்டும் எமது சமூகத்தை இருநோக்கி தள்ளவே இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.

இதனை ஏற்றுக் கொள்ள என் மனம் மறுக்கின்றது . என்னைப் போன்று நீங்களும் ஏனையவர்களும் அவ்வாறே உணரலாம் .உண்மையில் எமது தரப்பில் இழப்புகள் உண்டு நான் ஏற்றுக் கொள்கிறேன். எனினும் எதிர்கால சந்ததியினர் அதனை தெரிந்து கொண்டு சகோதர இனத்தவரின் மீது அவர்கள் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவார்கள் அல்லவா? இந்த வெறுப்புணர்வு காலப்போக்கில் இனவாதமாக மாறும். சற்று யோசித்துப் பாருங்கள் இவ்வாறானவைகளை நாம் நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

இந்நாடு அனைவருக்கும் உரியது. இங்கு தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் என்ற பேதம் இல்லை. அவ்வாறு எமது பிள்ளைகளை வழி நடத்துங்கள் .அவர்களை இந்த நாட்டில் நிம்மதியாக வாழ விடுங்கள். இவ்வாறான மோசமான விடயங்களை அவர்கள் மனதிற்கும் மூளைக்கும் கொண்டு செல்லாதீர்கள் .

தயவு செய்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 30 வருட காலத்தில் நாம் அனுபவித்தவை போதும். இப்போது 15 வருடங்கள் கடந்து விட்டன மீண்டும் மீண்டும்.பிஞ்சுகளின் மனதில் நஞ்சை கலக்காதீர்கள் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் உங்களில் ஒருவனாக


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.