yarlathirady.com

2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் ICC கொண்டு வந்துள்ள முக்கிய தீர்மாணம்...!!

[2024-05-18 21:55:43] Views:[277]

2024 இருபதுக்கு இருபது உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் திகதி வழங்கப்படாது என்று ICC முடிவெடுத்துள்ளது.

போட்டியின்போது மழை குறுக்கிட்டால் 4 மணி நேரம் மட்டும் கூடுதல் நேரம் வழங்க ஐசிசி மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளன.

2024 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2ஆம் திகதி தொடங்குவதுடன் இறுதிப் போட்டி ஜூன் 29 ஆம் திகதி நடைபெற உள்ளது.

போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், மழையினால் தடங்கல் ஏற்பட்டால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மேலதிக நாட்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் அரையிறுதிக்கு கூடுதல் நாள் கொடுத்தாலும், இரண்டாவது அரையிறுதிக்கு கூடுதல் நாள் கொடுக்க முடியாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு கூடுதல் நாள் வழங்கப்பட வேண்டுமென்றால், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வெற்றி அணிக்கு விளையாடுவதற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும்.

இதன் காரணமாக இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு கூடுதல் நாள் வழங்காமல் 4 மணி நேரம் மட்டும் கூடுதலாக வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளன.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.