70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி: மங்கோலியாவில் தொடரும் துயரம்...!!
[2024-06-14 10:44:39] Views:[179] மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மேல் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவிற்கு குளிர்காலம் நிலவும். இந்தநிலையில் மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.இதன் காரணமாக அந்நாடு முழுவதும் பனியால் உறைந்துள்ளது. விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை பனிப்புயலால் சேதமடைதுள்ளன. இதனால் அங்கு உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடுமையான வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு பொருள் தட்டுப்பாட்டால் மங்கோலியாவில் உணவின்றி சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.