உலகின் பேராசிரியராக சாதனைன படைத்த 12 வயது சிறுவன்..!!
[2024-06-25 09:15:38] Views:[251] இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.
அவரது அறிவார்ந்த நிலை காரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விருந்தினர் பேராசிரியராக விரிவுரைகளை வழங்க அவர் ஏற்கனவே அழைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் போட்டித் தேர்வான SAT தேர்வில் 11 வயதில் 1500 மதிப்பெண்கள் பெற்று உலக சாதனை படைத்தார் சுபோனோ பாரி.
சுபோனோ பாரி அமெரிக்காவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் டிப்ளோமா பெறும் இளைய மாணவர் ஆவார். அவரது திறமையின் காரணமாக,கணிதம் மற்றும் இயற்பியலில் நியுயோர்க் பல்கலைக்கழகத்தில் முழுமையான புலமைப்பரிசிலை பெற்றுள்ளார்.பாரி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் அவர் இளைய பேராசிரியராகவும், மும்பை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விரிவுரையாளராகவும் உள்ளார்.