முதன் முறையாக ஐசிசியின் வருடாந்த மாநாடு இம்முறை இலங்கையில்...!
[2024-07-16 11:19:07] Views:[233] ஆசிய பிராந்தியத்தில் முதன் முறையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
அதன் படி, குறித்த மாநாடு 2024 ஜூலை 19 முதல் 22 வரை நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கிரிக்கெட் மாநாட்டில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா போன்ற பிராந்தியங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள, சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 108 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடதக்கது.