விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பயணிகளின் நிலை??
[2024-07-24 14:59:41] Views:[188] நேபாளம் காத்மாண்டு அருகே 19 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரியவருகிறது காத்மாண்டு, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானமே விழுந்து நொறுங்கியது.
ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி
விபத்துக்குள்ளானதாகவும் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு நிலவி வருவதாகம் கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான விபத்தை அடுத்து காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.