வயநாடு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி தேவைப்படும்-கேரளா...!!
[2024-08-11 10:49:10] Views:[286] வயநாடு நிலசரிவு சீரமைப்புக்கு சீரமைப்பு பணிக்கு 2000 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மந்திரி மற்றும் வனத்துறை மந்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 'வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக 2000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்' என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர்கள், இதற்காக அரசு குடியிருப்பு உள்பட 125 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துடன் வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.