இந்தியாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்: மக்கள் வீதிகளில் தஞ்சம்...!!
[2024-08-20 12:09:18] Views:[232] இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.
பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5KM ஆழத்தில் இன்று காலை 06.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஏழு நிமிட இடைவெளியில் 4.9 மற்றும் 4.8 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்துள்ள நிலையில், அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.