yarlathirady.com

அதிபரின் தண்டனை ; மயங்கி விழுந்த 50 மாணவிகள்.!

[2024-09-19 15:25:43] Views:[273]

ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாத மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவிகளை அழைத்த அதிபர் தொடர்ந்து 03 நாட்களுக்கு 200 தோப்புக்கரணம் போடுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தோப்புக்கரணம் போட்ட மாணவிகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிலரது கால்கள் வீங்கியுள்ளது.

எனினும் தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் 50 மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

மாணவிகளின் நிலையை கண்டு பதற்றமடைந்த ஆசிரியர்கள் அவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்ததுடன் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.