அதிபரின் தண்டனை ; மயங்கி விழுந்த 50 மாணவிகள்.!
[2024-09-19 15:25:43] Views:[273] ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாத மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவிகளை அழைத்த அதிபர் தொடர்ந்து 03 நாட்களுக்கு 200 தோப்புக்கரணம் போடுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தோப்புக்கரணம் போட்ட மாணவிகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிலரது கால்கள் வீங்கியுள்ளது.
எனினும் தொடர்ந்து மாணவிகள் தோப்புக்கரணம் போட்டதால் 50 மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.
மாணவிகளின் நிலையை கண்டு பதற்றமடைந்த ஆசிரியர்கள் அவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்ததுடன் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.